எனது வெற்றி உறுதியாகிவிட்டதால் எதிர்க்கட்சிகள் பயத்தில் பொய் பிரச்சாரம் செய்கின்றன.. டிடிவி.தினகரன்
ஆர்கே.நகரில் தனது வெற்றி உறுதியாகிவிட்டதால் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் தனது வெற்றி உறுதியாகிவிட்டதால் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் தான் வெற்றி பெறுவது உறுதி என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்கே.நகரில் பணம் பட்டுவாடா செய்த அவரது ஆதரவாளர்கள் போலீசில் சிக்கியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டிடிவி.தினகரன் தாங்கள் பணம் கொடுப்பதாக எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம்சாட்டினார். தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சிகள் இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்வதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஆர்கே நகரில் தனது வெற்றி உறுதியாகி விட்டது என்றும் இதனை பொருத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்க பொய் புகார் கூறுவதாகவும் அவர் கூறினார். மேலும் யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனை தடுக்க முடியாது என்றும் தினகரன் தெரிவித்தார்.