For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரனின் வெற்றி நீர்க்குமிழி போன்றது.. நீடிக்காது.. அமைச்சர் ஓஎஸ் மணியன் கருத்து!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி நீர்க்குமிழி போன்றது அது நீடிக்காது என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி நீர்க்குமிழி போன்றது அது நீடிக்காது என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைதேர்தலில் டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தல் தோல்வி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

TTV Dinakaran Victory is like water bubble: OS Maniyan

இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் டிடிவி தினகரனை ஆதரிக்கும் தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, விபி கலைராஜன், பார்த்திபன் , முத்தையா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் 6 பேர் நீக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ஓஎஸ் மணியன் செய்தியாளர்களளிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரனின் வெற்றி நிலையானது அல்ல என்றார். இந்த வெற்றியின் மகிழ்ச்சி நீடிக்காது என்றும் அவர் கூறினார்.

டிடிவி தினகரன் வெற்றி நீர்குமிழியை போன்றது என்றும் அது நீடிக்காது என்றும் அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்தார்.
2ஜி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற தினகரன் அதிமுக பெயரையோ அல்லது ஜெயலலிதாவின் பெயரையோ உச்சரிக்க தகுதியற்றவர் என்றும் ஓஎஸ் மணியன் தெரிவித்தார்.

English summary
OS Maniyan said TTV Dinakaran victory will not be constant. He also TTV Dinakaran Victory is like water bubble.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X