அமாவாசை.. திருச்செந்தூர் முருகனை பயபக்தியோடு கும்பிட்ட டிடிவி தினகரன்!
அமாவாசை நாளில் திருச்செந்தூர் முருகனை பயபக்தியோடு கும்பிட்டுள்ளார் டிடிவி தினகரன்.
Recommended Video
தூத்துக்குடி: போயஸ்கார்டனில் ரெய்டு நடந்த நேரத்தில் டிடிவி தினகரன் திருச்செந்தூரில் இருந்தார். அமாவாசை நாளில் சூரசம்ஹார மூர்த்தியை பயபக்தியோடு வழிபட்டுள்ளார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரனுக்கும், சசிகலா குடும்பத்தினருக்கும் தற்போது நேரம் சரியில்லை எனவேதான். வருமானவரி சோதனை விடாமல் விரட்டி வருகிறது. ஆனாலும் அசராமல் பேசுகிறார் டிடிவி தினகரன்.
எங்களை யாரும் அசைக்கவோ அழிக்கவோ முடியாது என்று கூறினாலும் சமீபத்திய ரெய்டுகள் தினகரனை பதற்றப்படவே வைத்துள்ளது.
திருச்செந்தூரில் வழிபாடு
உறவினர்கள் எல்லோரும் வரிசையாக சிறைக்கு செல்லும் நிலையில் கோவில் கோவிலாக போய் வழிபட்டுக்கொண்டிருக்கிறார் தினகரன். நேற்றைய தினம் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டார்.
விடாத துன்பங்கள்
சூரசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் எதிரிகள் அழிவார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் அவர் கோவில் கோவிலாக போனலும் துன்பங்கள் விடாமல் விரட்டி வருகிறது.
சோதனை மேல் சோதனை
நேற்று திருச்செந்தூருக்கு போயிருந்த நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் போயஸ் தோட்ட வீட்டிற்குள் நுழைந்தனர். இதை கேள்விப்பட்ட உடன் உடனே பதறித்தான் போனார்.
படப்படப்பான டிடிவி தினகரன்
அதே வேகத்தோடு ஓபிஎஸ், ஈபிஎஸ் கருத்துக்கு எதிராக பதிவிட்டார் தினகரன். அதே பதற்றத்தோடு பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது எப்போதுமே சிரிப்போடு காணப்படும் தினகரனின் முகம் புன்னகையை தொலைத்திருந்தது. திருச்செந்தூர் முருகன் இன்னும் என்னென்ன சோதனை தரப்போகிறாரோ?