ஆர்.கே.நகரில் இன்று தேர்தல் நடந்தால் வெற்றி தினகரனுக்கே - ராஜநாயகம் 2வது சர்வே
ஆர்.கே. நகரில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தால் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன்தான் வெற்றி பெறுவார் என்று பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றால் டிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து இரண்டாவது முறையாக கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார் பேராசிரியர் ராஜநாயகம்.
பேராசிரியர் ராஜநாயகம்
பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பு சார்பில் கடந்த வாரம் வெளியான கருத்துக்கணிப்பில், டி.டி.வி.தினகரனின் பிரஷர் குக்கர் சின்னத்தை அத்தொகுதியிலுள்ள 91.6 சதவீதம் மக்கள் எளிதாக அடையாளம் காண்கிறார்கள் என்று கூறியிருந்தார். இம்முறை இது 97.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
தினகரன் பிரச்சார யுக்தி
அறிவாற்றல், துணிச்சல், நிர்வாக திறன், துடிப்பான செயல்பாடு, ஊடகச் சிறப்பு, வெகுஜன உறவு, சமூக அக்கறை ஆகிய மதிப்பீட்டில் டி.டி.வி.தினகரன் முன்னிலை வகிக்கிறார். இதுதான் மக்கள் அவரை விரும்ப காரணம் என கருத்து கணிப்பில் தெரியவந்தது.
தினகரனுக்கே வாய்ப்பு
ஆர்.கே.நகரில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்கப்பட்டதற்கு, டி.டி.வி.தினகரனுக்கு 35.5 சதவீதமும், மருது கணேஷ்க்கு 28.5 சதவீதமும், மதுசூதனனுக்கு 21.3 சதவீதமும், பா.ஜ.க., வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 1.5 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினகரனுக்கே வெற்றி
டிசம்பர் 13 முதல் 17 வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் படி, ஆர்.கே.நகரில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்கப்பட்டதற்கு மக்கள் அளித்த பதில்:
டிடிவி தினகரன் - 37.4%
திமுகவின் மருதுகணேஷ் - 24.3%
அதிமுகவின் மருதுகணேஷ் - 22.1%
நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் -4.8%
பாஜக சரியுமோ
இந்த கருத்துக்கணிப்பில் நோட்டாவைவிட பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் சரிந்துள்ளது. முடிவு செய்யவில்லை என 7 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் - 0.8%
மற்ற வேட்பாளர்கள் - 0.5%
நோட்டா - 3%
முடிவு செய்யவில்லை - 7.1%
தேர்தல் நடக்கட்டும்
தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ளன. இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மக்களை ஈர்க்க ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தேர்தல் ரத்தாகும் என்று பாஜக ஆருடம் கூறி வரும் நிலையில் தேர்தலுக்கு முன்பு இன்னும் என்ன கூத்துகள் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி.. பேரா. ராஜநாயகத்தின் சர்வேயில் பரபர தகவல்கள்