100 நாட்கள் போராட்டத்துக்கு வெற்றி... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: 100 நாட்களாக போராடி வந்த மக்கள் வெற்றி பெறும் வகையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 100 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளின்போது பேரணி சென்ற மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரிகளுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்றார். அங்கு ஆலையை மூட வேண்டும் என்ற அரசாணையை அவர் முன்பே ஆலை கேட்டில் அதிகாரிகள் ஒட்டினர். பின்பு அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
100 நாட்களாக போராடி வந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. இதை முன்கூட்டியே செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் 13 உயிர்கள் பலியாகியிருக்காது.