For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: விடுதலையானார் சோபியா.. பல ஆயிரம் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், இன்று மாலை போலீசாரின் காவலில் இருந்து வெளியே வந்தார் மாணவி சோபியா. அவரை பல ஆயிரம் பேர் திரண்டு வந்து வரவேற்றனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானத்திற்குள் வைத்து, பாஜக தலைவர் தமிழிசையிடம், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என மாணவி சோபியா என்பவர் கோஷமிட்டதாக தமிழிசை கொடுத்த புகாரில் சோபியா கைது செய்யப்பட்டார்.

Tuticorin court will decides the bail plea of Sophia  - Live Updates

இதையடுத்து, சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தூத்துக்குடி கோர்ட்டில் இன்று சோபியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு வெளியேறினார் சோபியா. அவரை வரவேற்க பல ஆயிரம் பேர் திரண்டு விட்டனர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டபடி சோபியாவை வரவேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Newest First Oldest First
5:45 PM, 4 Sep

தமிழிசை புகாரால் கைது செய்யப்பட்ட சோபியா விடுதலை செய்யப்பட்டார்

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சோபியா வீடு திரும்பினார்

சோபியாவை வரவேற்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்

பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று அத்தனை பேரும் கோஷம் போட்டதால் பரபரப்பு

3:12 PM, 4 Sep

பொது இடங்களில் குரல் எழுப்புவது குற்றமென்றால் அனைத்து அரசியல்வாதிகளும் குற்றவாளிகள்தான் -கமல்

அனைத்து அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டியவர்கள்தான்

சுதந்திர பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்

அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்- கமல் கேள்வி

2:31 PM, 4 Sep

சோபியா மீதான வழக்கை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

சோபியா கைது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

சோபியாவிற்கு மிரட்டல் விடுத்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் - ஸ்டாலின்

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு உள்ளது - ஸ்டாலின்

1:27 PM, 4 Sep

இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வருகிறார் சோபியா

ஜாமீன் கிடைத்த நிலையில் மாலை வெளியே வருகிறார்

சோபியாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வாய்ப்புள்ளது

11:59 AM, 4 Sep

தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்- சோபியா வழக்கறிஞர் பேட்டி

தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திலும் புகார் அளிப்போம்

11:52 AM, 4 Sep

சோபியாவுக்கு ஜாமீன் கொடுத்தது தூத்துக்குடி கோர்ட்

சோபியாவுக்கு அறிவுரை கூறுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல்

நிபந்தனை ஏதும் விதிக்காமல் ஜாமீன் வழங்கியது கோர்ட்

11:52 AM, 4 Sep

சோபியாவிற்கு ஜாமீன் - தூத்துக்குடி நீதிமன்றம்
11:42 AM, 4 Sep

விமானத்துக்கு உள்ளே நான் எதுவும் பேசவில்லை - தமிழிசை விளக்கம்

சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் பேட்டி

விமானத்துக்குள்ளேயே சோபியா பாஜக ஒழிக என்று கூறினார்

விமான நிலையத்தில் இறங்கியதும் என்னைப் பார்த்து முறைத்தார் - தமிழிசை

இப்படி பேசுவது சரியா என்று அவரிடம் நான் கேட்டேன் - தமிழிசை

11:42 AM, 4 Sep

விமானத்திற்குள் அந்த பெண் என்னை பார்த்து கோஷமிட்டார் - தமிழிசை

நான் விமானத்திற்குள் நாகரீகம் கருதி பதில் அளிக்கவில்லை - தமிழிசை

11:39 AM, 4 Sep

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பு
10:59 AM, 4 Sep

சோபியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.. 12 மணிக்குத் தெரியும்

மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி 12 மணிக்கு தீர்ப்பளிப்பதாக அறிவித்தார்

10:59 AM, 4 Sep

டுவிட்டரில் சோபியா முன்னிலை

வட இந்திய ஊடகங்களும் சோபியா செய்திக்கு முன்னுரிமை

10:58 AM, 4 Sep

சோபியாவின் ஜாமின் மனு மீது விசாரணை
10:58 AM, 4 Sep

மாணவி சோபியாவுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வெடித்தது

திருவாரூர் மாவட்ட அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்

திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் சோபியாவுக்கு ஆதரவாக முழக்கம்

வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்

English summary
Tuticorin court will decides the bail plea of Sophia on today 12 PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X