Breaking News: விடுதலையானார் சோபியா.. பல ஆயிரம் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி: ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், இன்று மாலை போலீசாரின் காவலில் இருந்து வெளியே வந்தார் மாணவி சோபியா. அவரை பல ஆயிரம் பேர் திரண்டு வந்து வரவேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானத்திற்குள் வைத்து, பாஜக தலைவர் தமிழிசையிடம், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என மாணவி சோபியா என்பவர் கோஷமிட்டதாக தமிழிசை கொடுத்த புகாரில் சோபியா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தூத்துக்குடி கோர்ட்டில் இன்று சோபியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு வெளியேறினார் சோபியா. அவரை வரவேற்க பல ஆயிரம் பேர் திரண்டு விட்டனர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டபடி சோபியாவை வரவேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சோபியா கைது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
சோபியாவிற்கு மிரட்டல் விடுத்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் - ஸ்டாலின்
கருத்து சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு உள்ளது - ஸ்டாலின்
சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் பேட்டி
விமானத்துக்குள்ளேயே சோபியா பாஜக ஒழிக என்று கூறினார்
விமான நிலையத்தில் இறங்கியதும் என்னைப் பார்த்து முறைத்தார் - தமிழிசை
இப்படி பேசுவது சரியா என்று அவரிடம் நான் கேட்டேன் - தமிழிசை