தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது 100-ஆவது நாள் போராட்டத்தை அடுத்து அவர்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் செல்ல முடிவு செய்தனர்.
இதை தடுக்க போலீஸார் முயன்றனர். இதனை அடுத்து போலீஸால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றன. இந்நிலையில்
அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி அமர்வு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது.
ஐகோர்ட் மதுரைக்கிளையில் துப்பாக்கிச் சூடு தொடர்பான 10 வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக சென்னையில் 6 வழக்குகள் நடைபெற்று வருகின்றன. வழக்கு விசாரணையை ஜூலை 2-ஆம் தேதி ஒத்திவைத்தது.