நடிகரைக் கண்டதும் திசை திரும்பிய மக்கள்.. ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்!
தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினியிடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் சிரித்து பேசி மகிழ்ந்தனர்.
Recommended Video
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் ரஜினியிடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சிரித்து பேசி மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களை அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.
நேரில் சந்திப்பு
இன்று விமானம் மூலம் சென்னையில் இருந்து அவர் தூத்துக்குடி சென்றார். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தார்.
செல்பி எடுத்த மக்கள்
அப்போது சிகிச்சை பெறுபவர்களும் அவர்களின் உறவினர்களும் நடிகர் ரஜினிகாந்திடம் சிரித்து பேசி மகிழ்ந்தனர். பலர் நடிகர் ரஜினிகாந்துடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
நிவாரணம்
அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், மேலும் காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கினார்.
நடிகன் என்பதால்..
ரஜினி வருகை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடி புறப்படும் முன்பு தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் தான் நடிகன் என்பதால் நடிகனான தன்னை பார்க்கும் போது தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றார்.
ரஜினி சொன்னபடியே
அவர் சொன்னபடியே தூத்துக்குடி மக்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரித்து பேசி மகிழ்ந்தனர். ரஜினி சொன்னது போலவே தூத்துக்குடி மக்கள் நடிகர் ரஜினியை பார்த்ததும் சில மணி நேரம் கவலைகளை மறந்துள்ளனர்.