For Daily Alerts
Just In
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனின் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வேல்முருகனின் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு!- வீடியோ
உளுந்தூர்பேட்டை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனின் நீதிமன்ற காவல் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அக்கட்சியினர் தாக்கினர். இந்த வழக்கில் வேல்முருகன் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து என்எல்சி முற்றுகை போராட்டம் தொடர்பாக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் வேல்முருகன் காவலை ஜூன் 22வரை நீட்டித்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுங்கச்சாவடி சேதப்படுத்த வழக்கில் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற நீதிபதி லதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Comments
tvk velmurugan police custody extremists தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் போலீஸ் காவல் நீட்டிப்பு
English summary
TVK leader Velmurugan Police custoy extended till june 22nd Ulundurpet Court has ordered in toll gate attack case.
Story first published: Friday, June 8, 2018, 12:35 [IST]