இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரமலான் வாழ்த்து!
இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளது.
சென்னை: இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான ரம்ஜான் திருநாள் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
அன்பு, நன்மை, ஈகை, இச்சையடக்கம் என்னும் மேன்மைகளைப் படைத்த திருக்குர்ஆன்! மனித வாழ்வின் ஒளியாகவும் வழியாகவும் திகழும் திருக்குர்ஆன்! பேரண்டத்தின் திருமறையாம் திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம் நம்பிக்கை அளிக்கும் மாதம்!
தீமைகளினின்றும் விடுபட உள்ளத்திற்கு உரமூட்டும் மாதம்!தூய ரமலான் மாதம் முழுவதன் தவ இருத்தல் நிறைவு ரமலான் பெருநாள்! இப்பெருநாள் விடுக்கும் செய்தி, எல்லாரோடும் இணக்கம் கொள்ளுங்கள்; இல்லாதோருக்கு உதவி செய்யுங்கள் என்பதாகும்!
இதனையே வாழ்வின் பொருளாக ஏற்று, ஈகைப் பெருநாளில் வறியவர்க்கு "ஜக்காத்" வழங்குவதன் மூலம் பிறர்க்கீந்து மகிழ்ச்சிகொள்ளும் எம் இனிய இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தூய ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.