சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க எதிர்ப்பு- வேல்முருகன் தலைமையில் போராட்டம்
சேலம்: சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் இரும்பாலை நடத்தில் இயங்குவதாக கூறி அதன் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதனிடையே சேலம் இரும்பாலை மெயின் கேட் முன்பாக மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்தும் தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.