Breaking News Live: எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல்
சென்னை: பெண் செய்தியாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்தை பகிர்ந்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.,வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஏப்.29-ல் மெரினாவில் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினாவில் வரும் 29-ந் தேதியன்று போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரி 71-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அனைத்து கிராம மக்களின் கூட்டமைப்பு சார்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை- பாஜக பிரமுகர் கைது
திருவனந்தபுரம் - சென்னை ரயிலில் நள்ளிரவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஓடும் ரயிலில் 10 வயதுக்கும் குறைவான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான் காமுகன். ஈரோடு ரயில் நிலையத்தில் காமுகனை பிடித்து போலீசில் பெற்றோர் ஒப்படைத்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட காமுகன், 2006-ம் ஆண்டு பாஜக வேட்பாளராக ஆர்.கே.நகர் தொகுதியி0ல் போட்டியிட்டவர் என தெரியவந்துள்ளது. அத்தேர்தலில் 1858 வாக்குகள் மட்டும் பெற்றவர் பிரேம் ஆனந்த். தென் சென்னை மாவட்ட பாஜக நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார் பிரேம் ஆனந்த். நடிகர் சந்தானத்துடன் மோதலில் ஈடுபட்டு அடிவாங்கியவரும் இந்த பிரேம் ஆனந்த்.