பனிச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட வீரருக்காக மக்கள் பிரார்த்தனை: மீட்பு வீடியோ இதோ
சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட வீரர் விரைவில் நலமடைய மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சின் சிகரத்தில் கடந்த புதன்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 4 தமிழக வீரர்கள் உள்பட 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.
அந்த 10 பேரும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஹனுமந்தப்பா கோப்பாட் 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து மக்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
மரணம்
இந்த நபர் மரணத்தையே ஏமாற்றிவிட்டார். 6 நாட்கள் 25 அடி ஆழத்தில் பனியில் இருந்துள்ளார். #SiachenMiracle என்று தத் ட்வீட் செய்துள்ளார்.
|
பிரார்த்தனை
கடும் குளிருடன் போராடிய எங்கள் வீரர் ஹனுமந்தப்பா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்கிறார் அர்பிதா.
|
குணமடைய
25 அடி ஆழத்தில் பனியில் 6 நாட்கள்! அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம் என்று மனிஷ் குர்பதே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
வீரர்
உயிருடன் மீட்கப்பட்ட வீரர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். ஐ லவ் இந்திய ராணுவம் என்று பவன் கூறியுள்ளார்.
|
ராணுவம்
ராணுவ வீரர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தற்போது தான் அறிந்தேன். அனைவரும் நம்பிக்கையை இழந்தும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்படும் நம் ராணுவத்திற்கு குடோஸ். சிறந்த தகவலுடன் நாளை துவங்குகிறேன் என்கிறார் அமித்.