For Daily Alerts
Just In
சேலம் தாய்- மகள் கொலை கொலை...4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை- வீடியோ
சேலத்தில் 2012ஆம் ஆண்டு தாயும் மகளும் நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம்: நகைக்காக தாய், மகளை கொலை செய்த நால்வருக்கு சேலம் நீதிமன்றம் இரட்டை ஆயூள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கடந்த 2012ஆம் ஆண்டு, சேகர் என்ற பட்டுசேலை நெசவாளர் சேகர் என்பவரது மனைவி ராணி மற்றும் மகள் சங்கீதா ஆகியோரை நகைக்காக ஐந்து பேர் கொடூரமாகக் கொலை செய்தனர்.
கொலையில் ஈடுபட்ட ஐந்து பேரில் விஜயகுமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். மற்ற நான்கு பேர் மீது கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.
இந்த இரட்டைக் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று சேலம் நீதிமன்றம் வழங்கியது. அதில், நான்கு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 22,000 ரூபாய் அபராதம் வழங்கி நீதிபதி ரவீந்தரன் உத்தரவிட்டார். இந்த நான்கு பேருமே இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
In Salem mother and daughter murdered for jewels. In this case twin life sentence given to the accused.
Story first published: Tuesday, June 13, 2017, 16:53 [IST]