கயிறு இருக்கு.. விஷம் இருக்கு.. என்ன வேனும் நவநீதகிருஷ்ணன்? கேட்கிறார் புகழேந்தி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணனை தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கிண்டலடித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தற்கொலை செய்துகொள்ள கயிறு மற்றும் விஷம் தன்னிடம் உள்ளது எப்போது தற்கொலை செய்து கொள்வீர்கள்கள் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணனை தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கேட்டுள்ளார்.
அதிமுக எம்பியான நவநீதகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என நாடாளுமன்றத்தில் மிரட்டல் விடுத்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தினகரன் ஆதரவாளரான புகழேந்தி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய புகழேந்தியை அவர் கடுமையாக விமர்சித்தார்.
தற்கொலை செய்துகொள்வதாக கூறிய நவநீதகிருஷ்ணன் இதுவரை அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவருக்கு எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது என்பதில் குழப்பம் இருக்கலாம்.
எனவே அவருக்கு விஷம் மற்றும் தூக்கு கயிறு ஆகியவை தயாராக உள்ளது என கூறினார். மேலும் அதிமுக கட்சி, ஆட்சி மற்றும் இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என்றும் புகழேந்தி கூறினார்.