கலெக்டரின் முக்கியமான வேலை எதுடா?.... மழை வந்தா லீவு விடறது சார்!!... #கந்துவட்டிகொடூரம்
நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த நிலையில் அதுகுறித்த கருத்துகளை நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
சென்னை: நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தினர் தீக்குளித்த நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வு கருத்துகளை டுவிட்டரில் வலைஞர்கள் பதிவிட்டுள்ளனர்.
நெல்லை காசி தர்மத்தில் இசக்கிமுத்து- சுப்புலட்சுமி தம்பதி கந்து வட்டிக் கொடுமையால் தனது இரு குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலக்ததில் தீவைத்துக் கொண்டனர். இதில் சுப்புலட்சுமியும், இரு குழந்தைகளும் இறந்துவிட்டனர்.
இசக்கிமுத்துவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீக்குளிப்பு சம்பவத்தால் கந்து வட்டி சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கந்து வட்டிக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
|
அதிகார பலத்தின் வெளிப்பாடு
காவல்துறைய அலட்சியம் பண/சாதி/அதிகார பலத்தின் வெளிப்பாடு.இன்னும் பல இசக்கிமுத்து குடும்பங்கள் தமிழ்நாட்டில்...
|
மறைக்கவோ இயலாது
இன்னும் பல குடும்பங்கள் வட்டிக்கு பணம் வாங்கி தான் வாழ்க்கையை நடத்த முடிகிற நிலைமை இங்கே..
மறக்கவோ? மறைக்கவோ? இயலாது
|
வாய் திறந்து பேசுவது
இது வரைக்கும் வாயை திறக்காத #எடப்பாடி அரசு #கந்துவட்டி விவகாரத்தில் வாய் பேசுவது ஆச்சரியம் தான்
|
லீவு விடறது
கலெக்டரோட முக்கியமான வேலைகளில் ஒன்று மழை வந்தா லீவு விடறது சார்...
|
ஊடகங்களில் இல்லை
இதுவரை கந்துவட்டி க்கு விட்ட நபருடைய புகைப்படம் ஊடகங்களில் ஏன் வரவில்லை ...