கண்டனம், கோபம், இரங்கல்.. விக்னேஷ் தற்கொலை பற்றி சமூகவலைத்தளங்களில் மாறுபட்ட கருத்து
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி விக்னேஷ் காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து சமூக வலைத்தளங்களில் மாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன.
சிலர் அனுதாபமாகவும், சிலர் கோபமாகவும் விக்னேஷ் குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்த தற்கொலைகளை சீமான் தடுத்திருக்க முடியும் என்பது மேலும் சிலரின் ஆதங்கமாக உள்ளது.
சிலர் ஊடங்கள் மீது சாடியுள்ளனர். சிலர், இனிமேலும் இதுபோல யாரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்பதை அறிவுறுத்தியுள்ளனர்.
விக்னேஷ் தற்கொலை குறித்து டிவிட்டரில் வெளியாகியுள்ள சில கருத்துக்களை பாருங்கள்.
|
நெருப்பாய் இரு
" இருப்பாய் தமிழா நெருப்பாய் " என்று செந்தமிழன் சீமான் முழங்கியதை தப்பாய் புரிந்துக்கொண்டாயோ #விக்னேஷ்குமார்.. என்று சொல்கிறது இந்த டிவிட். நெருப்பில் குளித்ததை இந்த டிவிட் சுட்டிக்காட்டுகிறது.
|
தலைவர்கள் தப்பிவிடுவர்
எந்த கட்சித்தலைவன் தீக்குளிச்சு சாவறானோ, அந்த கட்சிக்கு வாழ்நாள் முழுக்க ஓட்டு போடலாம்னு பார்க்கிறேன், ஒருத்தனும் சாக மாட்டிக்கிறான், என்கிறது இந்த டிவிட்.
|
குடும்பத்தை நினைக்கனும்
விக்னேஷ் மரணம் மனவலியை தருகிறது - சீமான்.. உங்களுக்கு மனவலி மட்டும்தான், அந்த பையன் குடும்பத்தை நினைச்சு பாருங்க.. என்று சொல்கிறது இந்த டிவிட்.
|
போதும் வீர வணக்கம்
முத்துக்குமார்,செங்கொடி,விக்னேஷ் 3வீரவணக்க நாள் உருவாக்கிடாங்க. ஆனா வருசத்துக்கு இன்னும் #362நாட்கள் இருக்கிறதை நினைச்சாதான்.. என்று சொல்கிறது இந்த டிவிட்.
|
பெற்றோர் நிலை பரிதாபம்
எத்தனை கனவுகள்... எதிர்பார்ப்புகள்... உன் பெற்றோரின் ஒப்பாரி உனக்கு கேட்கட்டும். #விக்னேஷ் #அரசியல்(தற்)கொலைவேண்டாம்.. என்கிறது இந்த டிவிட்.
|
அரசியலில் இது சகஜமாம்
விக்னேஷ் உடலினை துருப்பு சீட்டாக வைத்து போராட்டம் நடத்தி காவிரி உரிமத்தை மீட்டு விட்டுவோம்,,,!!!! தமிழக அரசியல் பொறுத்தவரை உயிர்கள் மலிவே என்று வேதனை வெளிப்படுத்துகிறது இந்த டிவிட்.
|
ஊடகங்கள் மீது பாய்ச்சல்
தீக்குளித்த விக்னேஷ் இப்போதுதான் உயிர் இழந்ததாக செய்திகள் வருகின்றன ஆனா ஊடகங்கள் நேத்தே கருமாதி செய்துவிட்டன. என்று கூறுகிறது இந்த டிவிட். சில காட்சி ஊடகங்கள் விக்னேஷ் இறந்துவிட்டதாக நேற்றே செய்தி வெளியிட்டதை கொட்டியுள்ளார்.