சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று தீக்குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேர் கைது
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று தீக்குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: டிஜிபி அலுவலகத்தில் நேற்று தீக்குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் ரகு, கணேஷ் ஆகியோர் நேற்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் 2 பேரும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டனர்.
அவர்களை சக காவல்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேனியில் இருந்து ராமநாதபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றதாக கூறிய அவர்கள், தேனி மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சாதி ரீதியாக ஒதுக்கி இடமாற்றம் செய்ததாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த மெரினா போலீசார், ஆயுதப்படை காவலர்கள் ரகு மற்றும் கணேஷை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட காவலர்கள் இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் குற்றச்சாட்டுக்கு தேனி மாவட்ட எஸ்பி நேற்றே மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.