For Daily Alerts
Just In
விஜயகாந்த் கட்டி வரும் புதிய வீட்டிலிருந்து 2 பசு மாடுகள் திருட்டு.. பரபரப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் இருந்து 2 பசுமாடுகள் திருடு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
விஜயகாந்த் வீட்டிலிருந்து 2 பசு மாடுகள் திருட்டு- வீடியோ
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் இருந்து 2 பசுமாடுகள் திருடு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கத்தில் அவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
அந்த வீட்டில் செல்லப்பிராணிகளும் கால்நடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு பசு மாடுகள் திடீரென மாயமாகியுள்ளன.
பசுமாடுகள் மாயமானது குறித்து பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் வீட்டிலேயே பசுமாடுகள் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Two cows stolen in DMDK leader Vijyakanth house. Cows stolen in Vijayakanth Kattupakkam house.