குடிபோதையில் தகராறு செய்த தந்தை.. தற்கொலை செய்து கொண்ட 2 மகள்கள்.. கடலூரில் அதிர்ச்சி
கடலூர் அருகே குடிபோதையில் தந்தை தகராறு செய்ததால் 2 மகள்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
கடலூர்: குடிபோதையில் தந்தை தகராறு செய்ததால் வேதனையடைந்த 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படு
கடலூர் அருகே குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கணேசன், இவருக்கு டிரேசா என்ற 15 வயது மகளும் ஐயம்மாள் என்ற 22 வயது மகளும் உள்ளனர்.
மதுபோதைக்கு அடிமையான கணேசன் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். தந்தை அடிக்கடி தகராறு செய்து வந்ததால் இரண்டு மகள்களும் வேதனையடைந்துள்ளனர்.
கணேசன் வழக்கம் போல் நேற்றும் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த 2 மகள்களான டிரேசாவும், ஐயம்மாளும் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் விஷம் குடித்தும் ஒருவர் தூக்கிட்டும் தற்கொலை செய்துகொண்டனர்.
தகவலறந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.