"சாமி"களே புல்லட்டுல போகுது பாரப்பா.. ஆவென வாய் பிளந்து பார்த்த பக்தர்கள்!
கோவையில் இரு பூசாரிகள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பாதையில் ஜக்கி வாசுதேவும், பாபா ராம்தேவும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் பிரம்மாண்ட ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை பிரதமர் நரேந்திர மோடி வந்து சிவராத்திரி நன்னாளில் திறந்து வைத்தார்.
இந்த சிவனை தரிசனம் செய்ய உலகமெங்கும் உலக மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆன்மிக பெரியவர்களும் சிவன் தரிசனத்தை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆதியோகி சிவனை தரிசிக்க பாபா ராம்தேவ் கோவை சென்றார்.
அவரை ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். பின்னர் ஆதி சிவனை தரிசிக்க பாபா ராம்தேவை பின்னிருக்கையில் அமர வைத்து ஜக்கி பைக்கில் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகின்றன.
ஜக்கி துகாட்டி ஸ்ராம்பளர் ரக பைக்கை ஓட்டிச் சென்றார். இதை பார்த்துவிட்டு பக்தர்கள் வாயை பிளந்தபடி ஆச்சரியத்தில் திளைத்து நின்றனர்.