சென்னையில் பரிதாபம்.. எழும்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயில் மோதி பலி
சென்னையில் தண்டவாளத்தை கடக்க முய்னற போது மின்சார ரரயில் மோதி என்ஜினியர் உள்பட 2 பேர் மின்சார ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்
சென்னை : சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிரே வந்த ரயில் மோதி 2 பேர் பலியாகினர்.
தஞ்சாவூரை அடுத்த ஓரத்தநாடு பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். பணியை முடித்து விட்டு சென்ற வினோத் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார், அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் வினோத் மீது மோதியதில் அவர் பலஅடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த எழும்பூர் ரயில்வே போலீசார் வினோத்தை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வினோத் பரிதாபமாக உயிரிழந்தார்.
என்ஜினியர் வினோத் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி விபத்தில் உயிரிழந்தாரா அல்லது, இதுதற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் எழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.