For Daily Alerts
Just In
சென்னை சைதாப்பேட்டையில் கட்டுமான பணியின் போது விபத்து.. 10வது மாடியில் இருந்து விழுந்து 2 பேர் பலி!
சென்னை சைதாப்பேட்டையில் கட்டுமான பணியின் போது 10வது மாடியில் இருந்து தவறி விழுந்து 2 தொழிலாளர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர்.
Recommended Video
சைதாப்பேட்டையில் கட்டுமான பணியின் போது விபத்து.. 2 பேர் பலி!-வீடியோ
சென்னை: சைதாப்பேட்டையில் கட்டுமான பணியின் போது 10வது மாடியில் இருந்து தவறி விழுந்து 2 தொழிலாளர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர்.
சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், பொதுப்பணித்துறை சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் இன்று லிப்ட்டுக்கான அறை அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்து பிரவீன் மற்றும் கோவிந்தன் ஆகிய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Two laborors dead after falling down from 10th floor in Chennai Saidapet.
Story first published: Tuesday, September 11, 2018, 11:19 [IST]