For Daily Alerts
Just In
மதுரையில் தனியார் மது பார் கடை இடிந்து விழுந்து இருவர் பலி - வீடியோ
மதுரையில் இயங்கி வந்த தனியார் மது பார் கடையின் சுற்ருச் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகினர்.
மதுரை: தனியார் மது பார் கட்டத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் இரு தொழிலாளர்கள் பலியாகினர்.
மதுரையில் 10க்கும் மேற்பட்ட தனியார் மது பார்கள் இயங்கி வந்தன. உயர்நீதிமன்ற மதுரை கிளை தனியார் மது பார்களை மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவை மூடப்பட்டன.
இந்நிலையில் சில பார்களை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது நேற்று ஒரு தனியார் மது பாரின் கட்டடத்தை இடித்துக்கொண்டிருக்கும் போது சுற்றுசு சுவர் இடிந்து விழ்ந்தது.
அந்த இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் அதே இடத்தில் மரணமடைந்தனர். அவர்களது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
In Madurai when a private bar building was demolished, unfortunately compound wall fell down and two labors killed