For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: திருடர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டி போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

தாம்பரம் அருகே திருட வந்த இருவரை பொதுமக்களே கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தாம்பரம், திருடர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்- வீடியோ

    சென்னை: தாம்பரம் அருகே ஆடிட்டர் வீட்டில் புகுந்து திருட முயன்ற 2 பேரை, கதவை பூட்டி கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்ததுடன், அவர்களை நையபுடைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    சென்னை தாம்பரம் அடுத்த படப்பை நீலமங்களத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் சீனிவாசன். இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலை விஷயமாக டெல்லி சென்றிருந்தார்.

    Two men arrested for robbery near Tambaram

    இந்நிலையில் அவர் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர்.
    இதனால் திருடர்கள் இருந்த வீட்டினை சம்யோஜிதிமாக கதவை வெளிப்புறமாக சாத்தி பூட்டு போட்டு விட்டு மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

    அங்கு வந்த போலிசார் கதவை திறந்து உள்ளே சென்று இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர், ஆனாலும் பொதுமக்களில் சிலர் ஆத்திரம் அடைந்து அந்த திருடர்கள் மீது உருட்டுகட்டைகளை கொண்டு தாக்கினார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் திருட முயன்ற 2 பேரை கைது செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ், ஆனந்த் என தெரியவந்தது. அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

    English summary
    2 persons arrested for attempting to steal home near Tambaram, They were handed over to the police by the public. The police are investigating and arresting them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X