டிடிவி தினகரன் ஆதரவு எம்பிக்கள் மேலும் 2 பேர் எடப்பாடி அணிக்கு தாவல்!
டிடிவி தினகரனின் ஆதரவு எம்பிக்கள் மேலும் 2 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: டிடிவி தினகரனின் ஆதரவு எம்பிக்கள் மேலும் 2 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இரட்டை இலைச்சின்னத்தை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிக்கு வழங்கியது. இதையடுத்து கட்சியும் சின்னமும் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்பின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
இதைத்தொடர்ந்து தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது. தினகரன் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு தாவி வருகின்றனர்.
நேற்று தினகரன் ஆதரவு எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், கோபால கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இரட்டை இலை எங்கு இருக்குமோ அங்குதான் நாங்கள் இருப்போம் என்று அவர்கள் விளக்கம் தெரிவித்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் எம்பி உதயக்குமார், வேலூர் எம்பி செங்குட்டுவன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.