For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடியில் அனுமதியின்றி சரக்கு பாட்டில்களை பதுக்கிய இரண்டு பேர் கைது!

தூத்துக்குடியில் அனுமதியின்றி சரக்கு பாட்டில்களை கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அனுமதியின்றி சரக்கு பாட்டில்களை கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மதுகடைகளுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரோலியாக மது பாட்டில்களை எப்படி விற்பது என தெரியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பனப்பட்டி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையாவுக்கு தகவல் கிடைத்தது.

Two persons have been arrested for hiding liquor bottles in Tuticorin

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் சண்முகநாதன் தலைமையிலான போலீசார் சம்பந்தபட்ட கோழிப்பண்ணைக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதற்காக 574 மதுப்பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கோழிப் பண்ணையில் பதுங்கியிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், ராமசாமி ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மாவட்ட மதுவிலக்கு கூடுதல் துணைபோலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி பார்வையிட்டார்.

English summary
Two persons have been arrested for hiding liquor bottles in Tuticorin. Police inquiry to them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X