உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்- உதயநிதி திடீர் டுவீட்
உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார் என்று உதயநிதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயாராக உள்ளோம் என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலையை மர்மநபர்கள் உடைத்துவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு ஸ்டாலின், கனிமொழி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! .
ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்!. உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா!.
பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்!
— Udhay (@Udhaystalin) March 20, 2018
உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்! 💪 #PeriyarStatue
உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்! என்று உதயநிதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் சமீபமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
கருவில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியிருந்த அவர் திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.