உளுந்தூர்பேட்டையில் பலத்த மழை... இடி தாக்கி இருவர் பரிதாப பலி: வீடியோ
உளுந்தூர்பேட்டையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது இடி தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
விழுப்புரம்: விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் இடி தாக்கி இரண்டு பேர் அநியாயமாக உயிர்ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது. நேற்று உளுந்தூர்பேட்டையில் கனத்த மழை பெய்தது. அப்போது இடி இடித்ததில் இருவர் அதே இடத்தில் பலியாகினர். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் நால்வரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் நேற்று திருவண்ணாமலையில் இடிக்கு ஆறு பேர் பலியாகினர். முன்பெல்லாம் கிராமங்களில் பரந்து விரிந்து சும்மா கிடக்கும் நிலங்களில் இடிதாங்கி அமைத்திருப்பார்கள். இப்போது பெரும்பாலான இடங்களில் இடிதாங்கி இல்லாத காரணத்தால், இடிக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.