வெயில் அடிச்சா அடிக்கட்டும்.. எனக்கென்ன.. இதெப்படி கீது!??
சென்னை: அடிக்கிற வெயிலுக்கு நடு ரோட்டிலேயே உட்கார்ந்து சோறு பொங்கி சாப்பிட்டு விட்டு சூடா டீயும் போட்டு குடிக்கலாம் போல.. அப்படி ஒரு அனல் வெயிலாக இருக்கிறது.
இந்த வெயிலிலிருந்து தப்பத்தான் எப்படியெல்லாம் போராடுகிறார்கள் மக்கள். என்ன செய்தாலும் அனல் தாக்குதலிலிருந்து தப்பிக்கத்தான் முடியவில்லை.
வெளியில் நடமாடவே அஞ்சும் நிலையில் உள்ளனர் மக்கள். வெளியில் போக ரொம்ப யோசிக்க வேண்டியுள்ளது. காரணம், அனலும், தகிப்பும்தான்.
குடை டூவீலர்
இந்த வெயிலிலிருந்து தப்ப இவர் செய்த ஐடியாவைப் பாருங்க. சென்னையில் கண்ட காட்சிதான் இது. தனது டூவீலரிலேயே ஒரு குடையை செருகி வைத்து விட்டார்.
நீ அடி.. எனக்கென்ன!
வெயில் அடிச்சாலும் எனக்கு கவலையில்லை என்று ஜாலியாக வலம் வருகிறார் இந்த அன்பர். இந்த வெயிலிலிருந்து தப்ப இதுதான் ஒரே வழி என்கிறார் சிரித்தபடி.
டூ இன் ஒன் ஐடியா
இதுபோன்ற ஐடியாக்களை வாட்ஸ்ஆப்பில் படமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாம்பரத்தில் கண்ட நிஜக் காட்சி இது. உண்மையிலேயே செம ஐடியாதான். வெயிலிலிருந்து தப்பிய மாதிரியும் இருக்கும். திடீரென கோடை மழை பெய்தாலும் நனைய மாட்டோம். வேலையும் நடந்து முடியும்.
பாலோ பண்ணுங்கப்பா
இது மாதிரி யோசித்து எல்லோரும் செயல்பட்டா கத்திரி என்ன.. கதிரவனே நேரில் வந்தாலும் கூட கவலைப்படத் தேவையில்லை.