நடிகர் ஆனந்தராஜ் வீட்டில் மர்மநபர்கள் கல்வீ்ச்சு.. கார் கண்ணாடி உடைப்பு
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஆனந்தராஜ் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் ஆனந்தராஜ். ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா பொதுச் செயலாளரானதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சசிகலா அணியையும் கடுமையாக சாடி பேசி வந்தார்.
ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை என்று கூறி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஆனந்தராஜ்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஆனந்தராஜ் வீட்டில் மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் அவர் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த கார் கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.