திராவிட நாடு.. யூனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா… பெயர் சூட்டி மகிழும் நெட்டிசன்கள்
மாட்டிறைச்சி தடையால் திராவிடநாடு என்ற கோஷம் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது. திராவிட நாட்டிற்கு யூனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா என்ற பெயர் சூட்டி டுவிட்டரில் நெட்டிசன்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
சென்னை: மாட்டிறைச்சிக்கு தடை என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு பாஜவிற்கு எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திராவிடம் குறித்த கருத்தாக்கங்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசும் பொருளாக மாறியிருப்பதோடு, முக்கிய சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
யூஎஸ்ஏ என்று அமெரிக்காவை அழைப்பது போன்று புதிதாக உருவாகும் திராவிட நாட்டிற்கு யூனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா என்றும் அதன் சுருக்க வடிவமாக யூஎஸ்எஸ்ஐ என்ற சொல்லை உருவாக்கி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
யூனைட்டட் ஸ்டேட்ஸ்
திராவிட நாட்டிற்கு யூனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா என்று மோகன் சந்தர் என்பவர் தனது பக்கத்தில் டுவிட் செய்துள்ளார்.
|
திராவிட நாடு குரல்
பாஜகவின் மூன்றாண்டு கால ஆட்சி திராவிட நாட்டிற்கு குரல் கொடுக்க சக்தி அளித்திருக்கிறது என்று பிரதாப் கிருஷ்ணசாமி பதிவிட்டுள்ளார்.
|
புதிய நாடு
நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள சாஜ், புதிய நாட்டிற்கான சிந்தனையை பாஜக உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
|
அண்ணாவே கொடுத்திருக்கலாம்
"அண்ணா காலத்தியிலேயே பிரிஞ்சு போய் இருந்திருக்கணும்" என்று முகம்மது ரஸ்வி என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.