For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி சென்னை தெருக்களில் கழிவு நீரை விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்!

சட்டசபையில் இன்று சென்னை மாநகராட்சி சட்டத்தை திருத்துவதற்கான ஒரு சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, மாநகராட்சி தெருக்களில், குடியிருப்புவாசிகள் கழிவு நீரை திறந்து விட்டால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்டமுன் வடிவு தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மேம்பாட்டு ஒழுங்கு முறையின் கீழ் அனுமதியின்றி கம்பி வடம், ஒயர், குழாய், வடிகால் மற்றும் கால்வாய் இணைப்பு அமைக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியிருப்பு வாசிகள் தெருக்களில் கழிவு நீர் விடுவதை தடுக்கும் சட்டமுன் வடிவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

Up to Rs.1 lakh fine for sewage water in chennai street

அதன்படி தெருக்களில் கழிவுநீர் விடும் வீட்டுக் காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கடைகளுக்கு ரூ.10 ஆயிரமும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.1 லட்சமும், வணிக வளாகங்களுக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.

அதன்படி, குடியிருப்பு வாசிகள் தெருக்களில் கழிவு நீர் விட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கடைகளுக்கு ரூ.10 ஆயிரமும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.1 லட்சமும், வணிக வளாகங்களாக இருந்தால் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Up to Rs.1 lakh fine for opened sewage water in chennai street
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X