திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வைகைசெல்வன் நக்கல்
திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று வைகைசெல்வன் தெரிவித்தார்.
கருணாநிதி மரணமடைந்ததும் திமுகவிலும் தர்மயுத்தம் தொடங்கிவிட்டது. கருணாநிதி மறைவை சாக்காக வைத்துக் கொண்டு திமுகவுக்குள் நுழைய அழகிரி முயற்சித்து வருகிறார்.
அதற்காக அவர் கட்சியினர் விரும்பத்தகாத கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கட்சியின் பெரும்பாலான உடன்பிறப்புகள் தன்னுடன்தான் உள்ளனர் என்று கூறியது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை திமுக செயற்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் அழகிரி இவ்வாறு பேசியுள்ளது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைசெல்வன் கூறுகையில் வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
திமுகவில் உருவாகியுள்ள புயலுக்கு அழகிரி என பெயர் வைக்கலாம் என வைகைசெல்வன் கிண்டல் செய்துள்ளார்.