For Quick Alerts
For Daily Alerts
Just In
சசிகலா கணவர் நடராஜன் நினைவிடத்தில் நெடுமாறன், வைகோ அஞ்சலி
மறைந்த ம. நடராஜன் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் : மறைந்த ம. நடராஜன் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியரும் தமிழ் தேசியவாதியுமான ம. நடராஜன் கடந்த 20ம் தேதி இதய நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடராஜனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் தமிழ்த்தேசியவாதிகளுமான வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் இன்று நடராஜன் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர். கண் கலங்கியபடி வைகோ நடராஜன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Comments
English summary
Vaiko and Nedumaran paid tribute at M. Natarajan's memorial at Thanjavur district Villar, Natarajan memorial is situated near Mullivaikkal Mutram.