For Daily Alerts
Just In
ஜெ. உடலுக்கு மனைவியுடன் வந்து வைகோ அஞ்சலி! பழ.நெடுமாறனும் இறுதி மரியாதை செலுத்தினார்!
ஜெயலலிதா உடலுக்கு வைகோ, நெடுமாறன் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு மனைவியுடன் வந்து மதிமுக பொதுச்செயலர் வைகோ அஞ்சலி செலுத்தினார். இதேபோல் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் ஜெயலலிதா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.'
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் ஜெயலலிதாவின் உடல் பீரங்கி வண்டியில் ஏற்றப்படு எம்ஜிஆர் நினைவிடத்துக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
குறைவான நேரமே இருப்பதால் கடுமையான கூட்ட நெரிசல் ராஜாஜி ஹாலில் ஏற்பட்டிருக்கிறது. மதிமுக பொதுச்செயலர் வைகோ, மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் ஜெயலலிதாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார்.
Comments
English summary
Vaiko paid his last tribue to Tamilnadu CM Jayalalithaa.
Story first published: Tuesday, December 6, 2016, 15:57 [IST]