மு.க. ஸ்டாலின் வேட்டியில் பட்ட கறை... அக்கறையுடன் துடைத்துவிட்ட வைகோ
ஆர்.கே.நகரில் இன்று மாலை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் வேட்டியில் பட்ட கறையை வைகோ அக்கறையுடன் துடைத்துவிட்டார்.
சென்னை : ஆர்.கே.நகரில் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் வேட்டியில் பட்ட கறையை வைகோ அக்கறையுடன் துடைத்துவிட்டதை பார்த்த உடன்பிறப்புகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட்கள் ஆகியன ஆதரவு அளித்துள்ளன. ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து அனைத்து கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஸ்டாலினின் வேட்டியில் ஏதோ கறை பட்டுவிட்டது. இதை அருகிலிருந்த வைகோ கவனித்தார். பின்னர் தண்ணீர் கொண்டு வர சொல்லி அந்த கறையை அக்கறையுடன் துடைத்துவிட்டார். இதை கட்சியினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.