ஒன்றல்ல, இரண்டல்ல, 1,08000 லட்டுகள்.. திருப்பூரில் தயாரிப்பு தீவிரம்.. வைகுண்ட ஏகாதசிக்காக
Recommended Video
திருப்பூர்: வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஸ்ரீவாரி அமைப்பு சார்பில் திருப்பூரில் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது.
நாளை, திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். இந்நாளில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உட்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்தால், பெருமாள் பாதத்தில் சேர்ந்து, மறுபிறப்பு இருக்காது என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
இந்த விழாவையொட்டி திருப்பூர் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீவாரி அமைப்பு சார்பில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்றும், நாளையும் லட்டு தயாரிக்கும் பணி முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நடைபெற உள்ளது. இதற்கு ஸ்ரீவாரி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த லட்டுகள் அனைத்தும் திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் பிரசித்தி பெற்றது. அதே பாணியில், வீரராகவ பெருமாள் கோவிலிலும் லட்டு வழங்க ஏற்பாடுகள நடந்து வருகின்றன.
ஓட்டு போட்டாச்சு.. ஓட்டு சீட்டுக்கள் கிடப்பதோ ரோட்டோரம்..உள்ளாட்சி தேர்தலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இது போன்ற ஆன்மீக சேவையை 12 வருடங்களாக ஏற்பாடு செய்து கொடுத்த ஸ்ரீவாரி அமைப்பினருக்கு பெண்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.