வண்டலூர் பூங்காவில் கன்று ஈன்ற காட்டு மாடு... மொத்த எண்ணிக்கை 18 ஆனது!
சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் காட்டுமாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. இதனால், பூங்காவில் உள்ள காட்டு மாடுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
வண்டலூர் கீதா
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி கீதா எனும் 12 வயது காட்டு மாடு குட்டி ஈன்றது.
7 வயது லட்சுமி
இந்த நிலையில், லட்சுமி எனும் 7 வயது காட்டு மாடு 4-வது ஈனுவாக மார்ச் 7-ஆம் தேதி ஆண் கன்று ஒன்றை ஈன்றது.
4 வயது கவி
இப்போது பிறந்துள்ள கன்றின் தந்தை இந்தப் பூங்காவில் பிறந்து வளர்ந்த கவி என்ற 4 வயது ஆண் காட்டு மாடாகும்.
ஆக மொத்தம் 18
இப்போது புதிதாய் பிறந்துள்ள இந்தக் கன்றுடன் சேர்த்து பூங்காவிலுள்ள காட்டு மாடுகளின் எண்ணிக்கை 10 ஆண் மாடு, 8 பெண் மாடு என மொத்தம் 18 ஆக உயர்ந்துள்ளது.
தேங்காய், வாழைப்பழம், கீரை
கன்று ஈன்றுள்ள காட்டு மாட்டுக்கு தேங்காய், கடலைப் பிண்ணாக்கு, கொண்டைக்கடலை, வாழைப்பழம், கீரை, சுரக்காய் ஆகியன சிறப்பு உணவாக கூடுதலாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.