For Daily Alerts
Just In
வர்தா புயல் பிரித்தெடுத்தாலும்.. அணைத்து ஆதரவு கொடுத்த "அம்மா"!
வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு நலன்பயக்கும் நோக்கத்தோடு, அம்மா உணவகங்கள் அனைத்தும் இலவசமாக மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: வர்தா புயல் காரணமாக அவதிப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்காக, நகரம் முழுக்க அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் வர்தா புயல் தாக்கத்தால் மரங்கள் பல வேரோடு சாய்ந்துள்ளன. மழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி சார்பில் நடத்தப்படும், அம்மா உணவகங்கள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்மா உணவகங்களில் இன்று இலவசமாகவே உணவு வழங்கப்படும் என்றும், மக்கள் பயனடையலாம் என்றும் அரசு இன்று மதியம் தகவல் வெளியிட்டுள்ளது.
Comments
English summary
Amma canteen is open throughout the city, food will be provided free of cost to all cyclone Vardah.
Story first published: Monday, December 12, 2016, 13:44 [IST]