For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேயாட்டம் போடும் மரங்கள், வெளுக்கும் மழை, ஆளைத் தள்ளும் காற்று: வீடியோ #vardah

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயலால் சென்னையில் பேய்க்காற்று வீசி வருகிறது.

வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து வருகிறது. புயலின் மையப்பகுதி பிற்பகல் 3.30 மணிக்கு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கனமழையுடன் பேய்க்காற்று வீசி வருகிறது.

rn rn

காற்று

சென்னையில் தற்போது மணிக்கு 108 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இப்படியொரு பேய்க்காற்றை தங்கள் வாழ்வில் பார்த்தது இல்லை என்று சென்னை மக்கள் தெரிவித்துள்ளனர்.

rn rn

மழை

சென்னையில் பேய்க்காற்று மட்டும் வீசவில்லை கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மழையை விட காற்று தான் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

rn rn

சென்னை

பேய்க்காற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட நினைத்து மொட்டைமாடிக்கு சென்றவர்கள் காற்றின் வேகத்தால் விழுந்து எழுந்தது தான் மிச்சம்.

rn rn

மாலை வரை

வர்தா புயலின் தாக்கம் இரவு 7 மணி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Vardah cyclone is posing a serious threat to Chennai as it is destructing the capital city on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X