For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வர்தா புயல் 2-5 மணிக்குள் கரையை கடக்கும்... வானிலை மையம் தகவல்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வர்தா புயல் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடக்கும். கடல் அலைகள் ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் எழக்கூடும். புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது காற்றின் வேகம் குறையும்.

Vardah to make landfall between 2-5 pm

புயல் கரையை கடந்த பின்பு காற்றின் வேகம் அதிகரிக்கும். புயல் கரையை கடந்த பிறகும் 12 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும். அரசின் மீட்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

English summary
Chennai Meteorological department head Balachandran said that Vardah cyclone will make a landfall between 2-5 pm today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X