For Daily Alerts
Just In
வர்தா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய அடுத்த வாரம் தமிழகம் வருகிறது மத்திய குழு
வர்தா புயல் பாதிப்பை பார்வையிட அடுத்த வாரம் மத்திய குழு தமிழகம் வருகிறது.
சென்னை: வர்தா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வருகை தர உள்ளது.
கடந்த வாரம் திங்கள்கிழமை சென்னையை மையம் கொண்டு கரையை கடந்த வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
வர்தா புயல் நிவாரணத்திற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய முதல்வர் பன்னீர்செல்வம், அடுத்ததாக நாளை பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரண நிதி கேட்க உள்ளார்.
இந்நிலையில் மத்திய குழு அடுத்த வாரம் தமிழகம் வந்து வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளது.
மத்திய உள்துறை இணைச் செயலாளர் தலைமையிலான குழு வர்தா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Central monitering team will visit Tamilnadu on next week over cyclone Vardah.
Story first published: Sunday, December 18, 2016, 16:40 [IST]