திமுகவிலும் இந்துத்துவ உளவியலுடனான சாதிய மனநோய்... பங்காளி கட்சி விசிக பாய்ச்சல்
சென்னை: திமுகவில் இந்துத்துவா உளவியலோடு சாதிய மனநோய் கொண்டவர்கள் இருப்பதாக அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சாடியுள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, தலித்துகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் திமுகவை சாடி வருகின்றனர். தற்போது திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்துத்துவ உளவியலோடும் பார்ப்பனிய உளவியலோடும் தான் பலர் இன்னமும் @arivalayam என்னும் சமூகநீதி பேரியக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.
— Vanni Arasu (@VanniArasu_VCK) February 21, 2020
இது தான் சாதிய மனநோய் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.#அரிஜன்#ஆர்எஸ்பாரதி#இடஒதுக்கீடு #பிச்சை
இந்துத்துவ உளவியலோடும் பார்ப்பனிய உளவியலோடும் தான் பலர் இன்னமும் @arivalayam என்னும் சமூகநீதி பேரியக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. இது தான் சாதிய மனநோய் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.
இவ்வாறு வன்னியரசு பதிவிட்டுள்ளார்.