For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒலி, ஒளி அலங்காரப் பொருட்கள் கடையில் தீ- 9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அலங்கார ஒலி, ஒளி பொருட்கள் வாடகைக்கு விடும் கிடங்கில் ஏற்பட தீ விபத்தினால் பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கண்ணடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் அதே பகுதியில் ஒலி ஒளி பொருட்கள், அலங்கார மின்விளக்குகள் மற்றும் மைக்செட் ஆகிய பொருட்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.

Vellore light and sound shop fired

நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடி வீட்டிற்குச் சென்றுள்ளார் பார்த்திபன். இந்நிலையில் நள்ளிரவில் கடை திடீர் என்று தீ பற்றி எரிவதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த பார்த்திபன் பகுதிமக்கள் உதவியுடன் தீயை அணைத்தார், இருப்பினும் தீ மளமளவென பரவ தொடங்கியது. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். திடீர் தீயால் அலங்கார மின்விளக்கு வாடகை கடையிலிருந்த அனைத்து பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தால் கிட்டதட்ட ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி சாம்பலானது குறிப்பிடத்தக்கது.

English summary
vellore district sound and light service shop got fired and 9 lakhs worth things fully vanished in this fire accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X