என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.. எச்சரிக்கும் வேல்முருகன்
என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
மதுரை: என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தங்களின் உரிமை போர் தொடரும் என அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 10ஆம் தேதி அனைவரையும் ஒருங்கிணைத்து என்எல்சி யை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கட்சியை தவிர அனைத்து கட்சியினரும் காவிரிக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் வேல்முருகன் எச்சரித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டை நடத்த விடமாட்டோம் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் விளையாட்டை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.