தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் என்னை அணுகலாம் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தொழில் துவங்குவோருக்கு உதவ காத்திருப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் தொழில் துவங்க ஏதுவாக சூழ்நிலை அமைந்துள்ளது. தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் என்னை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் ஜெயின் சமூகத்தினர் நடத்தும் தொழில் மாநாடு மற்றும் கருத்தரங்கில் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் துவங்கும் சூழ்நிலை அமைந்துள்ளது. இதனால், தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொழில் முனைவோருக்காக ஆளுநர் மாளிகையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்று பன்வாரிலால் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நல்ல நட்பில் இருப்பதால் தொழில் முனைவோருக்கு உதவ எளிதாக இருக்கும் என்றும் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.