For Daily Alerts
Just In
துணைவேந்தர் நியமனத்தில் தலித்களுக்கு முன்னுரிமை.. திருமா. வழக்கு! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: துணைவேந்தர் நியமனம் தொடர்பாக திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிடங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பெண்களை நியமிப்பதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருமாவளவன் தொடர்ந்த வழக்கு ஜூலை 17க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The Chennai High Court has issued notice to the Tamil Nadu government regarding the case filed by Thirumavalavan over the appointment of Vice Chancellor.
Story first published: Monday, June 12, 2017, 15:43 [IST]