For Daily Alerts
Just In
ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா நாயுடு!
சென்னை: ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் வெங்கையா நாயுடு.
சமீபத்தில் நடைபெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் வெங்கையாநாயுடு. அவர் ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக பதவி வகித்தார்.
நாளை குடியரசு துணை தலைவராக பதவியேற்க உள்ள நிலையில் இன்று தனது ராஜ்யசபா பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். ராஜ்யசபா தலைவராகவும் துணை குடியரசு தலைவரே செயல்பட வேண்டும். எனவே இப்போது அப்பதவியிலுள்ள ஹமீது அன்சாரியின் ராஜ்யசபா தலைவர் பதவிகாலம் முடிவடைகிறது. அவரிடம், ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வெங்கையா அளித்தார். அதை அவரும் ஒப்புக்கொண்டார்.
Comments
English summary
Vice President elect Venkaiah Naidu resigns from Rajya Sabha seat, outgoing vice president accepts his resignation
Story first published: Thursday, August 10, 2017, 19:23 [IST]