For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகை விசித்ரா தந்தை கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

By Karthikeyan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: நடிகை விசித்ராவின் தந்தை கொலை வழக்கில் வேலு என்பவருக்கு ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நடிகை விசித்ரா, சென்னை வேளச்சேரியில் வசிக்கிறார். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு, ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்லம்பட்டிடையில் உள்ளது.

 Vichitras father murdered case Guilty get life sentence

கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு விசித்ராவின் தந்தை வில்லியம் (70), தாய் வசந்தா (65) இருவரும் பண்ணை வீட்டுக்கு சென்று அங்கி தங்கியிருந்தனர். 12ஆம் தேதி இரவில் வீட்டிற்குள் புகுந்த இரு நபர்கள் வில்சனையும், அவரது மனைவி வசந்தாவையும் கத்தியால் தாக்கியதில் வில்சன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வசந்தா மயங்கினார். இதையடுத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருவள்ளூர் மாவட்டம், ஏலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் சுரேஷ்(29), மற்றும் ராமு மகன் வேலு(39), ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-2ல் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் போது கடந்த 2013ல் சுரேஷ் இறந்துவிட்டான். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வேலு என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்தார்.

English summary
Actress Vichitras father murdered case, Guilty get life sentence in prison
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X